ஆர்சிபி-யை விரட்டியடித்து பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்த ஆர்.ஆர்!! மும்பையின் கையில் ராஜஸ்தானின் குடுமி

Asianet News Tamil  
Published : May 20, 2018, 09:29 AM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
ஆர்சிபி-யை விரட்டியடித்து பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்த ஆர்.ஆர்!! மும்பையின் கையில் ராஜஸ்தானின் குடுமி

சுருக்கம்

rajasthan royals defeats rcb and retain play off chance

பெங்களூரு அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பிளே ஆஃப் வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது.

ஐபிஎல் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்றுடன் லீக் போட்டிகள் முடிவடைகின்றன. 53வது லீக் போட்டியில் பெங்களூருவும் ராஜஸ்தானும் பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்பில் முக்கியமான போட்டியில் மோதின.

ஜெய்ப்பூரில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரஹானே, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர் ராகுல் திரிபாதி அதிரடியாக ஆடி 80 ரன்களை குவித்தார். ரஹானே 33, கிளாசன் 32 ரன்கள் எடுத்தனர். ஆர்ச்சர் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகினர். கடைசி நேரத்தில் களமிறங்கிய கிருஷ்ணப்பா கௌதம், 5 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். தொடக்க வீரராக களமிறங்கிய ராகுல் திரிபாதி கடைசிவரை ஆட்டமிழக்காமல் 80 ரன்களை குவித்தார். இவரது அதிரடியால் ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 164 ரன்களை எடுத்தது.

165 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியில் பார்த்திவ் படேல் மற்றும் டிவில்லியர்ஸை தவிர வேறு யாரும் சோபிக்கவில்லை. கோலி 4 ரன்களில் வெளியேறினார். பார்த்திவ் படேல் 33 ரன்களும் டிவில்லியர்ஸ் 53 ரன்களும் அடித்தனர். அதன்பிறகு களமிறங்கிய மோயின் அலி, மந்தீப் சிங், கோலின் டி கிராண்ட்ஹோம், சர்ஃபராஸ் கான் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். அதனால் 19.2 ஓவருக்கே 134 ரன்களுக்கே பெங்களூரு அணி ஆல் அவுட்டானது. 

இதையடுத்து ராஜஸ்தான் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் பெங்களூரு பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியது. இந்த வெற்றியின் மூலம் 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் அணி 4வது இடத்தை பிடித்து, பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது. ஆனால் ராஜஸ்தான் அணி பிளே ஆஃபிற்கு தகுதி பெறுவது, மும்பை அணியின் இன்றைய வெற்றி தோல்வியை பொறுத்தே அமையும். டெல்லி அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் மும்பை வெற்றி பெற்றால், நெட் ரன்ரேட் அடிப்படையில் மும்பை அணி பிளே ஆஃபிற்கு தகுதி பெறும்.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

2 நாளில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டி.. ஒரே நாளில் 20 விக்கெட்.. மெல்போர்ன் பிட்ச் கியூரேட்டர் விளக்கம்!
இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் வி.வி.எஸ் லட்சுமணன்?.. பிசிசிஐ சொன்ன முக்கிய அப்டேட்!