புரோ கபடி: விறுவிறுப்பான ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது மும்பை அணி…

First Published Sep 23, 2017, 11:26 AM IST
Highlights
Pro Kabaddi The Mumbai team beat the Delhi team


புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 89-வது ஆட்டத்தில் யு-மும்பா அணி 30-28 என்ற புள்ளிகள் கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றிக் கண்டது.

புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 89-வது ஆட்டம் யு-மும்பா மற்றும் தபாங் டெல்லி அணிகள் இடையே டெல்லியில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் அபாரமாக ஆடிய தபாங் டெல்லி அணி 8-வது நிமிடத்தில் யு-மும்பா அணியை ஆல் ஔட்டாக்கி 11-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

பிறகு இரண்டே நிமிடங்களில் 4 புள்ளிகளைப் பெற்ற யு-மும்பா அணி, 7-12 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தது. 15-வது நிமிடத்தில் யு-மும்பா ரைடர் காஷிலிங் அடாகே, இரு புள்ளிகளைக் கைப்பற்ற, 10-13 என்ற நிலையில் பின்தங்கியிருந்தது யு-மும்பா. அதற்குப் பதிலடியாக டெல்லி வீரர் ரோஹித் இரு புள்ளிகளைப் பெற்றுத்தர, அந்த அணி 15-10 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இதன்பிறகு 18-வது நிமிடத்தில் டெல்லி அணியை ஆல் ஔட்டாக்கிய யு-மும்பா அணி, சரிவிலிருந்தும் மீண்டது. இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 16-16 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 28-வது நிமிடத்தில் இரு அணிகளும் 20-20 என்ற சமநிலையில் இருந்தன. தொடர்ந்து இரு அணிகளும் அபாரமாக ஆட 35-வது நிமிடம் வரை 25-25 என்ற சமநிலை நீடித்தது. 

இறுதியில் யு-மும்பா வீரர் ஸ்ரீகாந்த் ஜாதவ் தனது ரைடின் மூலம் ஒரு புள்ளியைக் கைப்பற்ற, அந்த அணியின் காஷிலிங் அடாகே தனது டேக்கிள் மூலம் ஒரு புள்ளியைப் பெற்றுத்தந்தார். இதனால் யு-மும்பா அணி 30-28 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிக் கண்டது.

யு-மும்பா 8-வது வெற்றியைப் பெற்று 44 புள்ளிகளுடன் 'ஏ' பிரிவில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. மேலும், அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் மும்பை அணி தக்கவைத்துக் கொண்டது.

ஆனால், 8-வது தோல்வியை சந்தித்துள்ளது டெல்லி அணி 29 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

tags
click me!