
புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 54-வது ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 33-28 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை பங்கமாக வீழ்த்தியது.
புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 54-வது ஆட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தின் ஆரம்பத்தில் அபாரமாக ஆடிய தமிழ் தலைவாஸ் 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
பிறகு 7-வது நிமிடத்தில் ஸ்கோரை 5-5 என்ற கணக்கில் சமன் செய்த தெலுங்கு டைட்டன்ஸ் அணி, முதல் பாதி ஆட்டநேர முடிவில் 12-10 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி, 33-28 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி கண்டது.
தெலுங்கு டைட்டன்ஸ் தரப்பில் சோம்பிர் 10 புள்ளிகளைப் பெற்றுத் தந்தார்.
தமிழ் தலைவாஸ் தரப்பில் அதன் கேப்டன் அஜய் தாக்குர் 7 புள்ளிகளைக் கைப்பற்றினார்.
இதில் வெற்றிப் பெற்றதன்மூலம் 3-வது வெற்றியைப் பெற்றுள்ள தெலுங்கு டைட்டன்ஸ் அணி, அடுத்த சுற்று வாய்ப்பையும் தக்கவைத்துக் கொண்டது.
இதுவரை எட்டு ஆட்டங்களில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணிக்கு இது 5-வது தோல்வி.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.