புரோ கபடி லீக் போட்டியில் 130-வது ஆட்டத்தில் புனேரி பால்டான் அணி 38-15 என்ற புள்ளிகள் கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை பங்கமாக தோற்கடித்தது.
புரோ கபடி லீக் போட்டியில் 130-வது ஆட்டத்தில் புனேரி பால்டான் அணியும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும் மோதின.
இதில், தொடக்கம் முதலே புனே அணிதான் ஆதிக்கம் செலுத்தி வந்தது. அதன்படி புனே அணி 15 ரைடு புள்ளிகள், 18 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் ஔட் புள்ளிகள், ஒரு கூடுதல் புள்ளி பெற்றது.
ஆனால், ஜெய்ப்பூர் அணி 8 ரைடு புள்ளிகள், 7 டேக்கிள் புள்ளிகளை மட்டுமே எடுத்தது.
புனே அணியின் ரைடர் தீபக் ஹூடா அதிகபட்சமாக 22 ரைடுகளில் 11 புள்ளிகள் பெற்றார்.
தடுப்பாட்டக்காரர் அக்ஷய் ஜாதவ் 4 டேக்கிள் புள்ளிகளை வென்று அசத்தினார்.
ஜெய்ப்பூர் தரப்பில் பவன் குமார் 3 ரைடு புள்ளிகளும், கேப்டன் மஞ்ஜித் சில்லார் 3 டேக்கிள் புள்ளிகளும் பெற்றனர்.
இறுதியில் புனேரி பால்டான் அணி 38-15 என்ற புள்ளிகள் கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை பங்கமாக தோற்கடித்தது.