
புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 78-வது லீக் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி 46-30 என்ற புள்ளிகள் கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியைத் தோற்கடித்தது.
புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 78-வது லீக் ஆட்டம் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தின் 4-வது நிமிடத்தில் தெலுங்கு டைட்டன்ஸை ஆல் அவுட்டாக்கியது பாட்னா. அந்த அணி 10-2 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலைப் பெற்றது.
பிறகு நிலேஷ் சலுங்கே, கேப்டன் ராகுல் செளத்ரி ஆகியோரின் அபார ஆட்டத்தால் சரிவிலிருந்து மீண்ட தெலுங்கு டைட்டன்ஸ் அணி, 11-ஆவது நிமிடத்தில் பாட்னாவை ஆல் அவுட்டாக்கியது. இதனால் 12-11 என்ற கணக்கில் அந்த அணி முன்னிலை பெற்றது.
பிறகு 13-வது நிமிடத்தில் ஸ்கோரை 14-14 என்று சமன் செய்த பாட்னா, கேப்டன் பிரதீப் நர்வாலின் அபார ஆட்டத்தால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் 23-16 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது.
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் பிரதீப் நர்வாலும், மானு கோயத்தும் தங்களின் அசத்தலான ரைடுகளின் மூலம் புள்ளிகளைக் கைப்பற்ற, 46-30 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிக் கண்டது பாட்னா அணி.
இந்த வெற்றியின் மூலம் இந்த சீசனில் 6-வது வெற்றியைப் பெற்றுள்ளது பாட்னா.
அதேநேரத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு இது 11-வது தோல்வியாகும்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.