புரோ கபடி: விறுவிறுப்பாக நடைபெற்ற அரியாணா - ஜெய்ப்பூர் ஆட்டம் சமனில் முடிந்தது…

Asianet News Tamil  
Published : Sep 15, 2017, 09:31 AM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
புரோ கபடி: விறுவிறுப்பாக நடைபெற்ற அரியாணா - ஜெய்ப்பூர் ஆட்டம் சமனில் முடிந்தது…

சுருக்கம்

Pro Kabaddi Ariyana - Jaipur match finished with equal ...

புரோ கபடி லீக் சீசன் - 5 போட்டியில் அரியாணா ஸ்டீலர்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் இடையே விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டம் 27-27 என்ற புள்ளிகள் கணக்கில் சமனில் முடிந்தது.

புரோ கபடி லீக் சீசன் - 5 போட்டியில் அரியாணா ஸ்டீலர்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் இடையேயான ஆட்டம் அரியாணா மாநிலம் சோன்பட்டில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் இரு அணிகளும் நிதானமாக ஆடி முதல் மூன்று நிமிடங்களின் முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமன் அடைந்தன.

தீபக் குமார் தாஹியா 6-வது நிமிடத்தில் தனது ரைடின் மூலம் இரு புள்ளிகளைக் கைப்பற்ற, அரியாணா அணி 5-4 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.

தாஹியா தொடர்ந்து அபாரமாக ஆடி 9-வது நிமிடத்தில் 8-4 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது அரியாணா.

பிறகு 15-வது நிமிடத்தில் ஜெய்ப்பூர் அணியை ஆல் அவுட்டாக்கிய அரியாணா அணி 14-7 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலைப் பெற்றது.

தொடர்ந்து அபாரமாக ஆடி அரியாணா அணி முதல் பாதி ஆட்டநேரம் வரை முன்னிலையை தக்கவைத்துக் கொண்டது. முதல் பாதி முடிவில் 17-9 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது அரியாணா.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டம் அப்படியே தலைகீழாக மாறியது. ஒட்டுமொத்தமாக 22-ஆவது நிமிடம் டேக்கிள் மூலம் முதல் புள்ளியைக் கைப்பற்றியது ஜெய்ப்பூர்.

இதன்பிறகு சிறப்பாக ஆடிய ஜெய்ப்பூர் அணி 30-வது நிமிடத்தில் 17-23 என்ற கணக்கில் பின் தங்கியிருந்தது. ஜெய்ப்பூர் பின்கள வீரர்கள் சிறப்பாக செயல்பட, அரியாணா ரைடர்களால், புள்ளிகளைக் கைப்பற்ற முடியவில்லை.

அதேசமயத்தில் ஜெய்ப்பூர் ரைடர் நிதின் ரவால் 35-வது நிமிடத்தில் சூப்பர் ரைடு மூலம் மூன்றுப் புள்ளிகளைக் கைப்பற்ற, அந்த அணி ஸ்கோரை சமன் செய்யும் வாய்ப்பை நெருங்கியது. பிறகு 36-வது நிமிடத்தில் அரியாணாவை ஆல் அவுட்டாக்கிய ஜெய்ப்பூர் அணி ஸ்கோரை 25-25 என்றக் கணக்கில் சமன் செய்தது.

பிறகு டேக்கிள் மூலம் இரு அணிகளும் தலா ஒரு புள்ளியைக் கைப்பற்றின. கடைசி நிமிடத்தில் சுர்ஜீத் சிங் தனது ரைடின் மூலம் ஒரு புள்ளியைப் பெற, அரியாணா - ஜெய்ப்பூர் இடையிலான ஆட்டம் 27-27 என்ற புள்ளிகள் கணக்கில் சமனில் முடிந்தது.

இதுவரை 15 ஆட்டங்களில் விளையாடியுள்ள அரியாணா அணி 49 புள்ளிகளைப் பெற்று "ஏ' பிரிவில் முதலிடத்தில் உள்ளது.

அதேநேரத்தில் ஜெய்ப்பூர் அணி 10 ஆட்டங்களில் விளையாடி 31 புள்ளிகளுடன் "ஏ' பிரிவில் 5-வது இடத்தில் உள்ளது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Riyan Parag | டிரெஸ்ஸிங் ரூமில் இ-சிகரெட்... வீடியோவால் சிக்கிய ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக்!
Riyan Parag: டிரெஸ்ஸிங் ரூமில் இ-சிகரெட்... வீடியோவால் சிக்கிய ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக்!