துப்பாக்கி சுடுதல் டிராப் பிரிவில் இந்தியாவிற்கு தங்கம் – 11 தங்கத்துடன் இந்தியா 4ஆவது இடம்!

Published : Oct 01, 2023, 11:04 AM ISTUpdated : Oct 01, 2023, 11:17 AM IST
துப்பாக்கி சுடுதல் டிராப் பிரிவில் இந்தியாவிற்கு தங்கம் – 11 தங்கத்துடன் இந்தியா 4ஆவது இடம்!

சுருக்கம்

ஆண்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் டேரியஸ் கினான் செனாய், ஜோரவர் சிங் சந்து மற்றும் பிருத்விராஜ் தொண்டைமான் ஆகியோர் அடங்கிய குழு தங்கம் வென்றுள்ளது.

சீனாவில் ஹாங்சோவில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் டிராப் பிரிவில் இந்தியாவின் டேரியஸ் கினான் செனாய், ஜோரவர் சிங் சந்து மற்றும் பிருத்விராஜ் தொண்டைமான் ஆகியோர் அடங்கிய குழு தங்கம் வென்றுள்ளது.

இந்தியாவிற்கு எச்சரிக்கை மணி அடித்த மிட்செல் ஸ்டார் – வார்ம் அப் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்!

இந்திய அணி லீடர்போர்டில் 361 புள்ளிகள் பெற்று முதலிடத்தை தட்டிச் சென்றது. குவைத் வெள்ளிப் பதக்கத்தையும், சீனா மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றது. இந்தப் போட்டியில் டேரியஸ் கினான் செனாய், ஜோரவர் சிங் சந்து மற்றும் பிருத்விராஜ் தொண்டைமான் ஆகியோர் முதல் 8க்குள் தகுதிச் சுற்றை முடித்துள்ளனர். எனினும், பிற்பகுதியில் நடக்கும் தனிநபர் இறுதிப் போட்டியில் சந்து மற்று கினான் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Cricket World Cup 2023: ஐசிசி ஆண்கள் உலகக் கோப்பை 2023க்கான 10 அணி வீரர்கள்!

இதே போன்று பெண்கள் பிரிவில் ராஜேஸ்வரி குமாரி, மனிஷா கீர், ப்ரீத்தி ரஜக் ஆகியோர் 337 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றனர். 356 புள்ளிகளுடன் உலக சாதனையுடன் தங்கம் வென்ற சீனாவை பின்னுக்குத் தள்ளியது. கஜகஸ்தான் 335 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றது. மனிஷா 114 புள்ளிகளுடன் தனிநபர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், இந்தியா தங்கம் கைப்பற்றிய நிலையில், பதக்கப் பட்டியலில் இந்தியா 11 தங்கம், 16 வெள்ளி மற்றும் 14 வெண்கலப் பதக்கத்துடன் 4ஆவது இடம் பிடித்துள்ளது.

ICC Mens Cricket World Cup 2023: உலகக் கோப்பைக்கு முன்னதாக காயமடைந்த டாப் 10 பிளேயர்ஸ்!

 

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!