
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ரஃபேல் நடால் உள்பட பல்வேறு வீரர்கள் அசத்தலான ஆட்டத்தால் நான்காவது சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் பாரிஸீல் நடந்து வருகிறது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் தென் கொரியாவின் சங் ஹியோனை எதிர்கொண்டார் ரஃபேல் நடால்.
அதில் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் நடால் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு 3-வது சுற்றில் ஸ்பெயினின் ஃபெலிஸியானோ லோபஸுடன் மோதினார் பிரான்ஸின் லூகாஸ் புய்லே. இவர், 6-3, 6-4 என்ற செட் கணக்கில் லோபாஸை வீழ்த்தி அடுத்த சுற்றுகு முன்னேறினார்
போட்டித் தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் ஜான் இஸ்னர் 7-6(2), 6-7(13), 6-3 என்ற செட் கணக்கில் ஆர்ஜென்டீனாவின் டியேகோ ஷ்வார்ட்ஸ்மெனை வீழ்த்தினார்.
போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் 6-4, 6-7(7), 6-4 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் பீட்டர் கோஜோவ்சிக்கை வீழ்த்தினார்.
பிரான்ஸின் நிகோலஸ் மஹட் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருந்த ஸ்பெயினின் பாப்லோ கரீனோ பஸ்டாவை வீழ்த்தினார்.
ஸ்பெயினின் ஃபெர்னான்டோ வெர்டாஸ்கோ 5-7, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை வீழ்த்தினார்.
உருகுவேயின் பாப்லோ கியூவாஸ் 6-7(7), 7-6(1), 6-2 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் ரமோஸ் வினோலஸை வீழ்த்தினார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.