IND vs PAK: இந்தியா முதலில் பவுலிங்! அணியில் என்னென்ன மாற்றம்? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!

Published : Feb 23, 2025, 02:16 PM ISTUpdated : Feb 23, 2025, 02:26 PM IST
IND vs PAK: இந்தியா முதலில் பவுலிங்! அணியில் என்னென்ன மாற்றம்? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!

சுருக்கம்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி துபாயில் தொடங்கியுள்ள நிலையில், பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. 

பாகிஸ்தான் பேட்டிங் 

சாம்பியன்ஸ் டிராபி போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை 4 ஆட்டங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி துபாயில் இன்று தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் தங்கள் அணி முதலில் பேட்டிங் செய்யும் என அறிவித்தார. அதன்படி இந்தியா முதலில் பவுலிங் செய்ய உள்ளது. 

இந்திய அணியை பொறுத்தவரை எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை. வங்கதேசத்துக்கு எதிராக விக்கெட் வீழ்த்தாத குல்தீப் யாதவ்க்கு பதிலாக தமிழ்நாடு வீரர் வருண் சக்கரவர்த்தி இந்திய அணியில் எடுக்கப்படுவார் என தகவல் பரவியது. இதேபோல் பாஸ்ட் பவுலர் ஹர்சித் ராணாவுக்கு பதில் இடதுகை பாஸ்ட் பவுலர் அர்ஷ்தீப் சிங் இடம்பெறுவார் என கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் வங்கதேசத்துக்கு எதிராக ஆடிய அதே அணி மீண்டும் களமிறங்குகிறது. இதன்மூலம் ரோகித் சர்மா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். 

இந்திய அணி பிளேயிங் லெவன் 

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன்:‍ ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது ஷமி மற்றும் ஹர்சித் ராணா. 

பாகிஸ்தான் பிளேயிங் லெவன் 

மறுபக்கம் பாகிஸ்தான் அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது அந்த அணியில் காயம் அடைந்த பகர் ஜமான் சாம்பியன்ஸ் தொடரை விட்டு வெளியேறியுள்ளார். அவருக்கு பதிலாக இடது கை ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் அணியில் இடம்பெற்றுள்ளார்.  பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன்:  முகமது ரிஸ்வான் (கேப்டன்), இமாம்-உல்-ஹக், பாபர் அசாம், சவுத் ஷகீல், சல்மான் ஆகா, குஷ்தில் ஷா, ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவூஃப், அப்ரார் அகமது மற்றும் தபாப் தாஹிர்.  

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் பாகிஸ்தான் 280க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்தால் தான் இந்தியாவை தங்களது பவுலிங் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?
IND vs SA: வரலாறு படைக்க காத்திருக்கும் விராட் கோலி, பாபர் அசாம் சாதனை சமன் செய்யப்படுமா?