மே.தீவுகளை துவம்சம் செய்து தொடரைக் கைப்பற்றி கர்சித்தது பாகிஸ்தான்..,

Asianet News Tamil  
Published : Apr 13, 2017, 11:31 AM ISTUpdated : Sep 19, 2018, 03:08 AM IST
மே.தீவுகளை துவம்சம் செய்து தொடரைக் கைப்பற்றி கர்சித்தது பாகிஸ்தான்..,

சுருக்கம்

Pakistan to suppress the expression of capturing metivukalai karcittatu

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் மே.தீவுகளை துவம்சம் செய்து வீழ்த்தி தொடரைக் கைப்ற்றி கர்சித்தது பாகிஸ்தான்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மேற்கிந்தியத் தீவுகளின் கயானா நகரில் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 233 ஓட்டங்கள் எடுத்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 71 ஓட்டங்களும், ஜேசன் முகமது 59 ஓட்டங்களும் எடுத்தனர்.

பாகிஸ்தான் தரப்பில் முகமது ஆமிர், ஜுனைத் கான், ஷதாப் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களான கம்ரான் அக்மல் ரன் ஏதுமின்றி அவுட்டானார். பின்னர் வந்த அஹமது ஷெஸாத் 3 ஓட்டங்களிலும் நடையைக் கட்டினார். பின்னர் வந்த பாபர் ஆஸம் 16 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இப்படி சரிவில் தான் தனது ஆட்டத்தைத் தொடங்கியது பாகிஸ்தான். 8.4 ஓவர்களில் வெறும் 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது பாகிஸ்தான்

இதனையடுத்து முகமது ஹபீஸுடன் இணைந்தார் ஷோயிப் மாலிக். அசத்தலாக ஆடிய இந்த இணை, பாகிஸ்தானை சரிவிலிருந்து மீட்டு 29.5 ஓவர்களில் 149 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது முகமது ஹபீஸின் விக்கெட்டை இழந்தது. 86 பந்துகளைச் சந்தித்த அவர் 2 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 81 ஓட்டங்கள் எடுத்தார். இந்த இணை 4-ஆவது விக்கெட்டுக்கு 113 ஓட்டங்கள் சேர்த்தது.

பின்னர் கேப்டன் சர்ஃப்ராஸ் அஹமது களமிறங்க, மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஷோயிப் மாலிக் 68 பந்துகளில் அரை சதத்தையும், தொடர்ந்து சிறப்பாக ஆடி 111 பந்துகளில் தனது 9-ஆவது சதத்தைப் பதிவு செய்தார். அதனால் பாகிஸ்தான் 43.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 236 ஓட்டங்கள் எடுத்து வெற்றியை தட்டிச் சென்றது.

ஷோயிப் மாலிக் 101, சர்ஃப்ராஸ் அஹமது 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஷெனான் காபிரியேல் 2 விக்கெட் வீழ்த்தினார்.

ஆட்டநாயகன், தொடர் நாயகன் என இரு விருதுகளையும் ஷோயிப் மாலிக் தட்டிச் சென்றார். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை பாகிஸ்தான் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி கர்சித்தது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஆஷஸ் தொடர் 2025-26: ஆஸ்திரேலியாவின் 14 ஆண்டு கால சாதனையை முறியடித்த இங்கிலாந்து
சிம்பு விக்கெட்டை எடுத்தது நான்தான்! வைரலாகும் முதல்வர் ஸ்டாலின் ஸ்பின் பவுலிங் வீடியோ!