
சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து கடுமையான போராட்டத்திற்கு பிறகு நகோமியை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் இந்தியாவின் சிந்து கடும் போராட்டத்துக்குப் பிறகு 10-21, 21-15, 22-20 என்ற செட் கணக்கில் ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை வீழ்த்தினார்.
போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருக்கும் சிந்து தனது 2-ஆவது சுற்றில் இந்தோனேசியாவின் ஃபிட்ரியானியுடன் மோதுகிறார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய் பிரணீத் 17-21, 21-7, 21-19 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் எமில் ஹோல்ஸ்டை தோற்கடித்தார்.
இரண்டாவது சுற்றில் சீனாவின் கியாவ் பின்னை எதிர்கொள்கிறார் சாய் பிரணீத்.
மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி ஜோடி 21-19, 21-19 என்ற நேர் செட்களில் மலேசியாவின் இயின் லூ லிம் - யாப் செங் வென் ஜோடியை வீழ்த்தி அசத்தியது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.