கடும் போராட்டத்திற்கு பிறகு நகோமியை வீழ்த்தினார் பி.வி.சிந்து...

Asianet News Tamil  
Published : Apr 13, 2017, 11:12 AM ISTUpdated : Sep 19, 2018, 03:08 AM IST
கடும் போராட்டத்திற்கு பிறகு நகோமியை வீழ்த்தினார் பி.வி.சிந்து...

சுருக்கம்

PV sindhu severe beating after the battle Naomi

சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து கடுமையான போராட்டத்திற்கு பிறகு நகோமியை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் இந்தியாவின் சிந்து கடும் போராட்டத்துக்குப் பிறகு 10-21, 21-15, 22-20 என்ற செட் கணக்கில் ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை வீழ்த்தினார்.

போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருக்கும் சிந்து தனது 2-ஆவது சுற்றில் இந்தோனேசியாவின் ஃபிட்ரியானியுடன் மோதுகிறார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய் பிரணீத் 17-21, 21-7, 21-19 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் எமில் ஹோல்ஸ்டை தோற்கடித்தார்.

இரண்டாவது சுற்றில் சீனாவின் கியாவ் பின்னை எதிர்கொள்கிறார் சாய் பிரணீத்.

மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி ஜோடி 21-19, 21-19 என்ற நேர் செட்களில் மலேசியாவின் இயின் லூ லிம் - யாப் செங் வென் ஜோடியை வீழ்த்தி அசத்தியது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஆஷஸ் தொடர் 2025-26: ஆஸ்திரேலியாவின் 14 ஆண்டு கால சாதனையை முறியடித்த இங்கிலாந்து
சிம்பு விக்கெட்டை எடுத்தது நான்தான்! வைரலாகும் முதல்வர் ஸ்டாலின் ஸ்பின் பவுலிங் வீடியோ!