சூதாட்டப்புகாரில் சிக்கிய கிரிக்கெட் வீரர்.. 10 ஆண்டுகள் தடை!!

Published : Aug 17, 2018, 04:52 PM ISTUpdated : Sep 09, 2018, 07:14 PM IST
சூதாட்டப்புகாரில் சிக்கிய கிரிக்கெட் வீரர்.. 10 ஆண்டுகள் தடை!!

சுருக்கம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நசீர் ஜாம்ஷெட் மீதான சூதாட்டப் புகார் உறுதியானதால், அவருக்கு 10 ஆண்டுகள் தடை விதித்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடப்பதைப் போல பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 

கடந்த 2017ம் ஆண்டு நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் நசீர் ஜாம்ஷெட் என்ற பாகிஸ்தான் வீரர், சூதாட்ட புகாரில் சிக்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்திவந்தது. 

நசீர் ஜாம்ஷெட் மீதான சூதாட்ட புகார் உண்மையானவை என விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனால், எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட ஜாம்ஷெட்டுக்கு 10 ஆண்டுகள் தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நசீர் ஜாம்ஷெட், பாகிஸ்தான் அணிக்காக 45 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

PREV
click me!

Recommended Stories

20 வயதில் டி20 உலகக்கோப்பை வெற்றி; அதுவே தொடர் வெற்றிக்கு நம்பிக்கை தந்தது: ரோஹித் சர்மா
உள்நாட்டு கிரிக்கெட்டின் கிங்..! இந்திய 'ஸ்டார்' ஆல்ரவுண்டர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!