பாகிஸ்தான் அணியின் கேப்டனுக்கு அபராதம் மற்றும் விளையாட தடை. ஏன்?

Asianet News Tamil  
Published : Jan 28, 2017, 12:06 PM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
பாகிஸ்தான் அணியின் கேப்டனுக்கு அபராதம் மற்றும் விளையாட தடை. ஏன்?

சுருக்கம்

பாகிஸ்தான் அணி, பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதால் அதன் கேப்டன் அசார் அலிக்கு ஊதியத்தில் 40 சதவீதம் அபராதமும், ஓர் ஆட்டத்தில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய 5-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தின்போது பந்துவீச ஒதுக்கப்பட்ட நேரத்தில் 2 ஓவர்கள் குறைவாக வீசியிருந்தது பாகிஸ்தான்.

ஓர் ஆண்டுக்குள் 2-வது முறையாக பாகிஸ்தான் அணி பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் அசார் அலிக்கு போட்டி ஊதியத்தில் 40 சதவீதம் அபராதமும், ஓர் ஆட்டத்தில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

எஞ்சிய வீரர்களுக்கு போட்டி ஊதியத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் வரும் ஏப்ரலில் நடைபெறவுள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டத்தில் அசார் அலி விளையாட முடியாது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Galle Test: 462 ரன்கள் குவித்த இந்தியா... சரசரவென சரிந்த இலங்கை டாப் ஆர்டர்..!
Yashasvi Jaiswal: வைபவ் வந்ததும் ஜெய்ஸ்வாலை கழட்டிவிடும் RR..? MI உடன் மெகா டிரேட் டீல்..?