எல்லா கிரெடிட்டும் அவங்களுக்குத்தான்.. நாங்களும் சளைத்தவர்கள் அல்ல!! நியூசிலாந்து கேப்டன் அதிரடி

By karthikeyan VFirst Published Jan 23, 2019, 4:42 PM IST
Highlights

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
 

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

நேப்பியரில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியில் கேப்டன் கேன் வில்லியம்சனை தவிர மற்ற எந்த வீரரும் சோபிக்கவில்லை. தொடக்க வீரர்கள் கப்டில் மற்றும் முன்ரோ ஆகிய இருவரையும் ஷமி தொடக்கத்திலேயே வீழ்த்தினார். பின்னர் டெய்லர் மற்றும் லதாம் ஆகிய இருவரையும் சாஹல் வீழ்த்தினார். நிகோல்ஸை கேதர் ஜாதவும் சாண்ட்னெரை ஷமியும் வீழ்த்தினர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் பொறுப்பாக ஆடிய கேப்டன் கேன் வில்லியம்சனை தனது முதல் விக்கெட்டாக வீழ்த்திய குல்தீப் யாதவ், அதற்கடுத்த 3 விக்கெட்டுகளையும் மளமளவென சரித்தார். இதையடுத்து அந்த அணி வெறும் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

158 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஆடிக்கொண்டிருந்தபோதே, கடும் வெயில் காரணமாக ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டதால் டக்வொர்த் முறைப்படி ஓவர் 49 ஆக குறைக்கப்பட்டு இந்திய அணிக்கு 156 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தவான் - கோலி ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் எளிதாக இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

போட்டி குறித்து பேசிய நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், நாங்கள் எங்கள் முழுத்திறமையையும் வெளிப்படுத்தி ஆடவில்லை. இந்திய பவுலர்கள் அபாரமாக பந்துவீசினர். குறிப்பாக இந்திய அணியின் ஸ்பின் பவுலர்கள் நல்ல லெந்தில் வீசினார். 250 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டிய ஆடுகளத்தில் 150 ரன்கள் என்பது மிகவும் குறைவு. இதற்கான கிரெடிட் முழுவதும் இந்திய அணியின் பவுலர்களையே சாரும். அவர்கள் அருமையாக பந்துவீசினார்கள். எங்கள் அணி பவுலர்களும் நன்றாகவே பந்துவீசினர். ஆனால் ஸ்கோர் மிகவும் குறைவு. எனினும் பவுலர்கள் சிறப்பாக வீசினர். இதே போட்டி குணத்துடன் அடுத்தடுத்த போட்டிகளை எதிர்கொள்வோம் என்று வில்லியம்சன் தெரிவித்தார். 
 

click me!