ஆஸ்திரேலியாவை அதகளம் செய்யப்போவது யார்..? புஸ்வானம் ஆகப்போறாரா புவனேஷ்வர்..?

By karthikeyan VFirst Published Nov 17, 2018, 5:21 PM IST
Highlights

புவனேஷ்வர் குமார், பும்ரா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஷமி என வலுவான பவுலிங் யூனிட்டை கொண்டுள்ளது இந்திய அணி.
 

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐசிசி தரவரிசை பட்டியலில் நம்பர் 1 அணியாக இருந்தும், தொடர்ச்சியாக வெளிநாடுகளில் இந்திய அணி தோல்வியை சந்தித்துவருகிறது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் டெஸ்ட் தொடர்களை இழந்துள்ளது. எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது இந்திய அணி. 

ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாததோடு, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு யூனிட் முன்னெப்போதையும் விட வலுவாக இருப்பது கூடுதல் பலம். புவனேஷ்வர் குமார், பும்ரா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஷமி என வலுவான பவுலிங் யூனிட்டை கொண்டுள்ளது இந்திய அணி.

இந்நிலையில், ஆஸ்திரேலிய தொடர் குறித்து பேசிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நெஹ்ரா, ஆஸ்திரேலிய அணி மறுகட்டமைப்பில் இருக்கும் இந்த தருணம் இந்தியாவிற்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பாகும். அவர்களை வீழ்த்தும் திறன் வாய்ந்த பவுலிங் யூனிட் நம்மிடம் உள்ளது. ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். பிட்ச்சில் கூடுதல் பவுன்ஸ் இருக்கும், ஆனால் ஸ்விங் இருக்காது. கூகபரா பந்தின் தையல் வலுவிழக்கும் வரை ஸ்விங் இருக்கும். 

இந்திய பவுலர்களை பொறுத்தமட்டில் அடிலெய்டில் புவனேஷ்வர் குமார் தொடங்கமாட்டார் என்றே நினைக்கிறேன். கூகாபரா பந்துகள் பழையதானால் இவரால் ஸ்விங் செய்ய முடியாது. ஆனால் பும்ரா, உமேஷ், ஷமி ஆகிய மூவரும் நன்றாக வீச வாய்ப்பிருப்பதாக கருதுகிறேன். உமேஷ் யாதவ் நம்ப முடியாத பல திறமைகளை கொண்டவர். உடற்தகுதியிலும் உமேஷ் சிறந்து விளங்குகிறார். அவர் இந்தியாவின் வறண்ட ஆடுகளங்களிலேயே அபாரமாக வீசினார். அதனால் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் சிறப்பாக வீசுவார் என்று நம்புகிறேன். அதேபோல் ஷமியும் சிறப்பாக வீசுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்று நெஹ்ரா தெரிவித்துள்ளார். 
 

click me!