
11வது ஐபிஎல் தொடருக்கான ஏலம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இன்றும் நாளையும் பெங்களூருவில் ஏலம் நடைபெறுகிறது.
இன்றைய ஏலத்தில் இந்திய வீரர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. லோகேஷ் ராகுல், மனீஷ் பாண்டே ஆகிய வீரர்களை முறையே பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகள் தலா 11 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தன.
மதிய உணவு இடைவேளைக்கு முன்வரை நடந்த ஏலத்தில் அதிகபட்சமாக ரூ.12.5 கோடிக்கு இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ராஜஸ்தான் அணி எடுத்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான கிறிஸ் கெயிலை அடிப்படை விலை கூட கொடுத்து எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. அதேபோல, நியூசிலாந்து அணியின் அதிரடி வீரர் மார்டின் கப்டிலும் புறக்கணிக்கப்பட்டார்.
இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டையும் எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.