ஐபிஎல் ஏலம்.. விலைபோகாத வீரர்கள்!! ஆம்லா, ஜோ ரூட் ஆகிய சீனியர்களும் புறக்கணிப்பு

 
Published : Jan 27, 2018, 01:44 PM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
ஐபிஎல் ஏலம்.. விலைபோகாத வீரர்கள்!! ஆம்லா, ஜோ ரூட் ஆகிய சீனியர்களும் புறக்கணிப்பு

சுருக்கம்

neglected players in IPL auction

11வது ஐபிஎல் தொடருக்கான ஏலம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இன்றும் நாளையும் பெங்களூருவில் ஏலம் நடைபெறுகிறது.

இன்றைய ஏலத்தில் இந்திய வீரர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. லோகேஷ் ராகுல், மனீஷ் பாண்டே ஆகிய வீரர்களை முறையே பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகள் தலா 11 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தன.

மதிய உணவு இடைவேளைக்கு முன்வரை நடந்த ஏலத்தில் அதிகபட்சமாக ரூ.12.5 கோடிக்கு இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ராஜஸ்தான் அணி எடுத்தது.

இன்றைய ஏலத்தில் சில முக்கிய சீனியர் வீரர்களும் அதிரடி வீரர்களும் புறக்கணிக்கப்பட்டனர். 

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான கிறிஸ் கெயிலை அடிப்படை விலை கூட கொடுத்து எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. அதேபோல, நியூசிலாந்து அணியின் அதிரடி வீரர் மார்டின் கப்டிலும் புறக்கணிக்கப்பட்டார்.

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டையும் எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. 

தென்னாப்பிரிக்க நட்சத்திர வீரர் ஹாசிம் ஆம்லா, ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் ஜேம்ஸ் ஃபாக்னர் மற்றும் இந்திய வீரர் முரளி விஜய் ஆகியோரும் ஏலத்தில் எந்த அணியாலும் எடுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டனர்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

U19 ஆசிய கோப்பையை தட்டித் தூக்கியது பாகிஸ்தான்! 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!
அலெக்ஸ் கேரியின் அசுர ஆட்டம்.. நிலைகுலைந்த இங்கிலாந்து.. ஆஷஸ் தொடரை வென்று ஆஸி., அசத்தல்!