தேசிய அளவில் மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம் -எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி ஒருங்கிணைக்கிறது...

First Published Jan 29, 2018, 10:45 AM IST
Highlights
National Games for Girls Today Start - MOP Vaishnava College combines ...


சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி ஒருங்கிணைக்கும் 13-வது தேசிய அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் (வாஸ்போ) இன்று தொடங்குகிறது.

சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி ஒருங்கிணைக்கும் 13-வது தேசிய அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் (வாஸ்போ) இன்று தொடங்குகி வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது.

இந்த  விளையாட்டுப் போட்டியின் தொடக்க நிகழ்ச்சி சேத்துப்பட்டில் உள்ள சென்னை பல்கலைக்கழக யூனியன் மைதானத்தில் இன்று மாலை நடைபெறுகிறது.

இதில் முன்னாள் சர்வதேச டென்னிஸ் வீரரும், டென்னிஸ் பயிற்சியாளருமான ரமேஷ் கிருஷ்ணன் தலைமை விருந்தினராகவும், இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்கின்றனர்.

மொத்தம் 8 பிரிவுகளில் நடைபெறும் போட்டியில் சுமார் 1000 பேர் வரையில் பங்கேற்க வாய்ப்புகள் உண்டு.

இப்போட்டியில் பெங்களூரு, ஐதராபாத், ஆந்திர பிரதேசம் மற்றும் ஈரோடு, நாமக்கல், , திருப்பூர், திருச்சி, திண்டுக்கல், சென்னையைச் சேர்ந்த கல்லூரிகள் கலந்து கொள்கின்றன.

tags
click me!