
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி தகுதிச்சுற்றின் கடைசி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளார்.
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில், உலகின் 107-ஆம் நிலை வீரரான பாம்ப்ரி தனது முதல் தகுதிச்சுற்றில், உலகின் 184-ஆம் நிலை வீரரான ஆர்ஜென்டீனாவின் ரென்úஸா ஆலிவோவை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தின் முடிவில் 6-4, 6-1 என்ற நேர் செட்களில் பாம்ப்ரி வென்றதையடுத்து அவர் தனது 2-வது தகுதிச்சுற்றில், உலகின் 133-ஆம் நிலையில் இருக்கும் ஸ்வீடனின் எலியாஸ் ஒய்மெரை சந்திக்கிறார்.
அவரை வெல்லும் பட்சத்தில் மியாமின் ஓபனின் பிரதான சுற்றுக்கு பாம்ப்ரி தகுதிபெறுவார் என்பது கொசுறு தகவல்.
பாம்ப்ரி, சமீபத்தில் நிறைவடைந்த இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் பிரதான சுற்றின் 2-வது ஆட்டம் வரை முன்னேறியிருந்தார்.
இதனிடையே, மியாமி ஓபனில் பங்கேற்ற மற்றொரு இந்தியரான ராம்குமார் ராமநாதன் தனது முதல் தகுதிச் சுற்றிலேயே அமெரிக்காவின் மைக்கெல் மோவிடம் 6-7(4/7), 4-6 என்ற செட்களில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.