
இந்திய பாட்மிண்டன் சங்கம் சார்பில் பாட்மிண்டன் ஜாம்பவான் பிரகாஷ் படுகோனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய பாட்மிண்டன் சங்க தலைவர் ஹிமந்தா விஸ்வா சர்மா நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “பாட்மிண்டன் விளையாட்டிற்காக பிரகாஷ் படுகோன் செய்த பங்களிப்பைப் பாராட்டி அவருக்கு இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. விருதுடன் ரூ.10 இலட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.
மேலும், இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் பாட்மிண்டன் விளையாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுபவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்று பெங்களூரில் நடைபெற்ற இந்திய பாட்மிண்டன் சங்க செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு உள்ளது“ என்று என்று ஹிமந்தா விஸ்வா சர்மா தெரிவித்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.