
தென்னிந்திய அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான வலைகோல் பந்தாட்டப் போட்டியின் காலிறுதியில் வென்று சென்னை, கோவை, திருச்சி கல்லூரிகள் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
தென்னிந்திய அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான காஜாமியான் கோப்பைக்கான வலைகோல் பந்தாட்டப் போட்டி திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் சனிக்கிழமை தொடங்கியது.
தமிழகம் மற்றும் கேரள மாநிலக் கல்லூரிகள் பங்கேற்று விளையாடிய இதில், நேற்று நடைபெற்ற காலிறுதியில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி மற்றும் கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியையும் அணிகள் மோதின.
இதில், 3-0 என்ற கோல் கணக்கில் கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியை, திருச்சி ஜமால் முகமது கல்லூரி வீழ்த்தி வெற்றி பெற்றன.
அதேபோன்று சென்னை நாசரேத் கல்லூரி, சேலம் ஏவிஎஸ் கல்லூரியை 6-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றிப் பெற்றன.
பின்னர், கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி மற்றும் சௌராஷ்டிரா கல்லூரியை இடையேயான ஆட்டத்தில் 1-0 என்ற கணக்கில் மதுரை சௌராஷ்டிரா கல்லூரியை வீழ்த்தி கோவை அணி வென்றது.
மற்றொரு ஆட்டத்தில் கோவை மருத்துவர் என்.ஜி.பி. கல்லூரி, திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரி இடையேயான ஆட்டத்தில் கோவை அணி வென்றது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.