
கொரியா ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சமீர் வர்மா, சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி இணை ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
கொரியா ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி தென் கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் 2-வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, தாய்லாந்தின் நிட்சான் ஜின்டாபோலுடன் மோதினார்.
இதில், 22-20, 21-17 என்ற நேர் செட்களில் நிட்சான் ஜின்டாபோலை தோற்கடித்தார் சிந்து.
சிந்து தனது காலிறுதியில் ஜப்பானின் மினட்சு மிடானியை எதிர்கொள்கிறார்.
அதேபோன்று, ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றில் இந்தியாவின் சமீர் வர்மா, ஆங்காங்கின் வாங் விங் கி வின்சென்டுடன் மோதினார்.
இதில், 21-19, 21-13 என்ற நேர் செட்களில் வாங் விங் கி வின்சென்டை வீழ்த்தினார் சமீர் வர்மா.
சமீர் வர்மா தனது காலிறுதியில் தென் கொரியாவின் சன் வான் ஹோவை எதிர்கொள்கிறார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி இணை தங்களின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 23-21, 16-21, 21-8 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் லீ ஜீ-லீ யங் இணையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி இணை தங்களின் காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ஜப்பானின் டகேஷி கமுரா - கெய்கோ சோனோடா இணையை எதிர்கொள்கிறது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.