
கொரிய ஓபன் கிராண்ட் ஃப்ரீ பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.காஷ்யப், ஆடவர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிச் சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினார்.
முன்னதாக, தனது காலிறுதியில் கொரியாவின் ஜியோன் ஹையோக் ஜின்னை எதிர்கொண்டார் காஷ்யப்.
இருவருக்கும் இடையே சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 18-21, 21-8, 21-16 என்ற செட் கணக்கில் காஷ்யப் வெற்றி பெற்றார்.
அவர் தனது அரையிறுதியில், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவரும், கொரியாவைச் சேர்ந்தவருமான சன் வான் ஹோவைச் சந்திக்க உள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.