
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) - 4 கால்பந்து போட்டியின் 23-வது ஆட்டத்தில் புனே சிட்டி அணியை 3-1 என்ற கணக்கில் பெங்களூரு எப்.சி. அணிகள் வெற்றிக் கொண்டது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) - 4 கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் புனேயில் நேற்றிரவு நடந்த 23-வது லீக் ஆட்டத்தில் புனே சிட்டி - பெங்களூரு எப்.சி. அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் 35-வது நிமிடத்தில் புனே வீரர் ஈசாக் தட்டிக் கொடுத்த பந்தை சக வீரர் அடில்கான் பாய்ந்து தலையால் முட்டி கோலாக்கி அட்டகாசப்படுத்தினார். அதன்படி, முதல் பாதியில் புனே அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
பின்னர் நடந்த இரண்டாவது பாதியில் 56-வது நிமிடத்தில் புனே வீரர் பல்ஜித் சைனி 2-வது முறையாக மஞ்சள் அட்டை எச்சரிக்கைக்கு உள்ளானார். இரண்டு மஞ்சள் அட்டை என்பது சிவப்பு அட்டைக்கு சமம் என்பதால் அவர் வெளியேற்றப்பட்டார். இதனால் எஞ்சிய நேரம் புனே அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டது.
இதை சாதகமாக பயன்படுத்தி பெங்களூரு வீரர் மிகு 64 மற்றும் 74-வது நிமிடங்களில் கோல் போட்டு அசத்தினார். கடைசி நிமிடத்தில் பெங்களுரு நட்சத்திர வீரர் சுனில் சேத்ரியும் தனது பங்குக்கு ஒரு கோல் அடித்தார்.
ஆட்டத்தின் இறுதியில் பெங்களூரு எப்.சி. 3-1 என்ற கோல் கணக்கில் புனே அணியை வீழ்த்தியது.
பெங்களூரு அணி இதுவரை 4 வெற்றிகளையும், ஒரு தோல்வியையும் எடுத்து 12 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. ஆறாவதுஆட்டத்தில் ஆடிய புனேவுக்கு இது மூன்றாவது தோல்வியாகும்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.