சர்வதேச செஸ்: தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார் விஸ்வநாத் ஆனந்த்…

Asianet News Tamil  
Published : Aug 12, 2017, 10:15 AM ISTUpdated : Sep 19, 2018, 01:00 AM IST
சர்வதேச செஸ்: தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார் விஸ்வநாத் ஆனந்த்…

சுருக்கம்

International Chess Vishwanath Anand advanced in continously

சின்கியூபீல்டு கோப்பைக்கான சர்வதேச செஸ் போட்டியின் 8-வது சுற்றின் முடிவில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், பிரான்ஸின் மேக்ஸைம் வச்சியர், ஆர்மீனியாவின் லெவோன் ஆரோனியன் ஆகியோர் தலா ஐந்து புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலையில் இருக்கின்றனர்.

சின்கியூபீல்டு கோப்பைக்கான சர்வதேச செஸ் போட்டி அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற 8-வது சுற்றில் ஆனந்த், மேக்ஸைம் வச்சியருடன் சமன் செய்தார்.

லெவோன் ஆரோனியன், ரஷியாவின் பீட்டர் ஸ்விட்லருடன் சமன் செய்தார்.

மற்றொரு ரஷிய வீரரான செர்ஜி கர்ஜாகின், அமெரிக்காவின் வெஸ்லே சோவை வீழ்த்தினார்.

ரஷியாவின் நெபோம் நியாக்ஷி - நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், அமெரிக்க வீரர்கள் பாபியானோ கருணா - ஹிகாரு நாகமுரா ஆகியோர் இடையிலான ஆட்டங்கள் சமனில் முடிந்தன.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

2 நாளில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டி.. ஒரே நாளில் 20 விக்கெட்.. மெல்போர்ன் பிட்ச் கியூரேட்டர் விளக்கம்!
இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் வி.வி.எஸ் லட்சுமணன்?.. பிசிசிஐ சொன்ன முக்கிய அப்டேட்!