அடுத்தச் சுற்றில் வீர நடை போடும் சிந்து, நெவால்…

Asianet News Tamil  
Published : Mar 30, 2017, 12:19 PM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
அடுத்தச் சுற்றில் வீர நடை போடும் சிந்து, நெவால்…

சுருக்கம்

Indus heroic march in the next round Nehwal Srikanth

இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின், பி.வி.சிந்து, சாய்னா நெவால் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் இராண்டாவது சுற்றுக்கு முன்னேறி அசத்தினர்.

டெல்லியில் நடைபெற்று வரும் இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில் பி.வி.சிந்து 21 - 17, 21 - 16 என்ற நேர் செட்களில் இந்தியாவைச் சேர்ந்த மற்றொரு வீராங்கனை அருந்ததியை வீழ்த்தினார்.

அடுத்தச் சுற்றில் ஜப்பானின் சேனாவுடன் மோதுகிறார் சிந்து.

மற்றொரு ஆட்டத்தில், சாய்னா தனது முதல் சுற்றில் 21 - 10, 21 - 17 என்ற நேர் செட்களில் சீன தைபேவின் ஷின் லீயைத் தோற்கடித்தார்.

அதேபோன்று ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் சமீர் வர்மா
21 - 17, 21 - 10 என்ற நேர் செட்களில் தென் கொரியாவின் சன் வான் ஹோவை வீழ்த்தினார்.

மற்றொரு இந்தியரான சாய் பிரணீத் 16 - 21, 21 - 12, 21 - 19 என்ற செட் கணக்கில் ஜப்பானின் கென்டா நிஷிமோட்டோவை தோற்கடித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 21 - 19, 21 - 16 என்ற நேர் செட்களில் சீனாவின் ஜாவ் ஜுன்பெங்கை தோற்கடித்து வெற்றிப் பெற்றார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

டி20 உலகக் கோப்பை.. ஸ்ட்ராங் டீமை களம் இறக்கும் இங்கிலாந்து.. ஆர்ச்சர் ரிட்டன்..!
நியூசிலாந்து ஓடிஐ தொடரில் 2 இந்திய 'ஸ்டார்' வீரர்களுக்கு ஓய்வு.. ரசிகர்கள் ஷாக்.. பிசிசிஐ முடிவு!