
கொரிய மாஸ்டர்ஸ் கிராண்ட் ஃப்ரீ பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.காஷ்யப், ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிச் சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினார்.
முன்னதாக, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சீனாவின் ஜோவ் ஜெகியை அவர் எதிர்கொண்டார்.
இருவருக்கும் இடையே 45 நிமிடங்கள் நீடித்த இந்த விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் 21-11, 13-21, 21-8 என்ற செட் கணக்கில் காஷ்யப் வெற்றி பெற்றார்.
இதையடுத்து காஷ்யப் தனது காலிறுதியில், போட்டித் தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருக்கும் கொரியாவின் ஜியோன் ஹையோக் ஜின்னை சந்திக்கிறார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.