
ஹாங்காங் சர்வதேச ஸ்குவாஷ் போட்டியில் தரவரிசையில் இருக்கும் போட்டியாளரை வீழ்த்தி இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா இறுதிச் சுற்றிற்கு முன்னேறி அசத்தினார்.
ஹாங்காங் சர்வதேச ஸ்குவாஷ் போட்டி நேற்று ஹாங்காங்கில் நடைப்பெற்றது.
இதன் அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பாவும், போட்டித் தரவரிசையின் முதலாவது இடத்தில் இருக்கும் ஹாங்காங்கின் ஆன்னி ஆவும் எதிர்கொண்டனர்.
இருவருக்கும் இடையே விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் 11-9, 10-12, 11-7, 8-11, 11-9 என்ற செட் கணக்கில் ஆன்னி ஆவை வீழ்த்தி ஜோஷ்னா சின்னப்பார் வெற்றிப் பெற்றார்.
கடந்தாண்டும் தனது அரையிறுதியில் ஆன்னி ஆவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் ஜோஷ்னா சின்னப்பார் என்பது கொசுறு தகவல்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.