இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் நியூஸிலாந்தை வீழ்த்தி கர்சித்தது

 
Published : May 01, 2017, 11:42 AM ISTUpdated : Sep 19, 2018, 03:13 AM IST
இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் நியூஸிலாந்தை வீழ்த்தி கர்சித்தது

சுருக்கம்

Indian team defeated New Zealand by a 3-0 win

26-ஆவது அஸ்லான் ஷா கோப்பை வலைகோல் பந்தாட்டப் போட்டியின் இரண்டாவது நாளில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் நியூஸிலாந்தை வீழ்த்தி கர்சித்தது.

26-ஆவது அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கிப் போட்டி மலேசியாவின் ஈபோ நகரில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியாவும், நியூஸிலாந்தும் எதிர்கொண்டன.

இந்த ஆட்டத்தின் 6-ஆவது நிமிடத்தில் நியூஸிலாந்து அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த அணியின் கோல் வாய்ப்பை இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் முறியடித்தார்.

அபாரமாக ஆடிய இந்திய அணி 23-ஆவது நிமிடத்தில் ஆட்டத்தின் முதல் கோலை அடித்தது. சிங்லென்சனா சிங் அடித்த "ரிவர்ஸ் ஷாட்'டை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட மன்தீப் சிங், அதை மிக அற்புதமாக கோலாக்கினார்.

27-ஆவது நிமிடத்தில் இந்தியாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில் பின்கள வீரரான ஹர்மான்பிரீத் சிங் அசத்தலாக கோலடிக்க, இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.

இதன்பிறகு கிடைத்த 4 பெனால்டி வாய்ப்புகளை இந்திய அணி கோட்டைவிட, 6-ஆவது பெனால்டி வாய்ப்பில் மீண்டும் ஹர்மான்பிரீத் சிங் கோலடித்தார்.

இதனால் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

கடைசி வரை போராடிய நியூஸிலாந்து அணி கோல் அடிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தது.

இதுவரை இரு ஆட்டங்களில் விளையாடியுள்ள இந்திய அணி 4 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

விஜய் ஹசாரே டிராபியில் கோலி மிரட்டல் சதம்.. 16000 ரன்களை கடந்து புதிய சாதனை
'பும்ரா, ரிஷப் பண்ட் என்னிடம் மன்னிப்பு கேட்டனர்'.. உருவக் கேலி குறித்து மனம் திறந்த பவுமா..!