நீங்க 3 பேரும் வீட்டுக்கு போங்க.. அவங்கள எடுத்துக்குறோம்!! பிசிசிஐ அதிரடி

By karthikeyan VFirst Published Nov 9, 2018, 11:17 AM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் மூன்று பவுலர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 
 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் மூன்று பவுலர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை வென்ற இந்திய அணி, டி20 தொடரையும் வென்றுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதலிரண்டு போட்டிகள் நிறைவடைந்த நிலையில், அந்த இரண்டு போட்டிகளிலுமே வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை வென்றது. 

இதையடுத்து மூன்றாவது மற்றும் கடைசி போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 11ம் தேதி நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து ஆட உள்ளது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் விதமாக மூன்றாவது டி20 போட்டியில் பும்ரா, உமேஷ், குல்தீப் ஆகிய மூவருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. சித்தார்த் கவுல் மற்றும் ஷாபஷ் நதீம் ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மூன்றாவது டி20 போட்டிக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), ஷிகர் தவான், ராகுல், தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், குருணல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், சாஹல், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, நதீம், சித்தார்த் கவுல்.
 

click me!