
வியத்நாம் ஓபன் கிராண்ட் ஃப்ரீ பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ருத்விகா ஷிவானி, லக்ஷயா சென், அர்ஜூன் - ராமசந்திரன் இணை காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.
வியத்நாம் ஓபன் கிராண்ட் ஃப்ரீ பாட்மிண்டன் போட்டி வியத்நாமில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சீன தைபேவின் வான் இ டாங்கை எதிர்கொண்டார் இந்தியாவின் ருத்விகா ஷிவானி.
இந்த ஆட்டத்தில் ருத்விகா, 21-15, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வான் இ டாங்கை வீழ்த்தினார் ருத்விகா.
ருத்விகா காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் இந்தோனேசியாவின் தினார் தியா அயுஸ்டினை எதிர்கொள்கிறார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், வியத்நாமின் ட்ரோங் தான் லாங்குடன் மோதினார்.
இதில், 21-14, 21-12 என்ற நேர் செட் கணக்கில் ட்ரோங் தான் லாங்கை வீழ்த்தினார் லக்ஷயா சென்.
லக்ஷயா சென் தனது காலிறுதியில் ஜப்பானின் கோடாய் நராவ்காவை சந்திக்கிறார்
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அர்ஜூன் - ராமசந்திரன் இணை, மலேசியாவின் லோ ஹாங் யீ - மஸ்தான் ஜின் வா இணையுடன் மோதியது.
இதில், 14-21, 21-12, 21-12 என்ற செட் கணக்கில் லோ ஹாங் யீ - மஸ்தான் ஜின் வா இணைஐ வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது அர்ஜூன் - ராமசந்திரன் இணை.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.