
எஸ்டோரில் ஓபன் டென்னிஸ் போட்டியின் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - பிரேசிலின் ஆண்ட்ரே சா இணை,. அர்ஜெண்டீனாவின் ரென்ஸா ஆலிவோ - பிரான்ஸின் பெனாய்ட் பேர் இணையைத் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
எஸ்டோரில் ஓபன் டென்னிஸ் போட்டி போர்ச்சுகலின் எஸ்டோரில் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - பிரேசிலின் ஆண்ட்ரே சா இணை தங்களின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அர்ஜென்டீனாவின் ரென்ஸா ஆலிவோ - பிரான்ஸின் பெனாய்ட் பேர் இணையுடன் மோதினர்.
இதில், 7-6 (1), 6-2 என்ற நேர் செட் கணக்கில் இந்திய இணை, அர்ஜெண்டீனா இணையை வீழ்த்தியது.
பயஸ் - ஆண்ட்ரே சா இணை தங்களின் காலிறுதியில் ஸ்பெயினின் நிகோலஸ் அல்மாக்ரோ - கார்ஸியா லோபஸ் இணையுடன் மோதுகின்றனர்.
இதேபோல் இந்தியாவின் திவிஜ் சரண் - பூரவ் ராஜா இணை தங்களின் முந்தைய சுற்றில் நியூஸிலாந்தின் மார்கஸ் டேனியல் - பிரேசிலின் மார்செலோ டெமோலினர் இணையை எதிர்கொண்டது.
இதில், 6-0, 7-6 (4) என்ற நேர் செட்களில் நியூசிலாந்து இணையை இந்திய அணி தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
திவிஜ் - பூரவ் இணை தங்களின் காலிறுதியில் உருகுவேயின் ஆரில் பெஹார் - பெலாரஸின் அலெக்சாண்டர் இணையுடன் மோதுகிறது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.