இந்திய ஓபன் பாட்மிண்டன்: இரண்டாவது சுற்றில் கால் பதித்த வீரர், வீராங்கனைகள்...

 
Published : Feb 01, 2018, 12:12 PM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
இந்திய ஓபன் பாட்மிண்டன்:  இரண்டாவது சுற்றில் கால் பதித்த வீரர், வீராங்கனைகள்...

சுருக்கம்

Indian Open Badminton players who all are advanced to Second Round

இந்திய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் சாய்னா நெவால், பி.வி.சிந்து, ருத்விகா ஷிவானி, அகர்ஷி காஷ்யப், சாய் பிரணீத் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

இந்திய ஓபன் பாட்மிண்டன் போட்டி டெல்லியில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஒன்றில் உலகின் 12-ஆம் நிலை வீராங்கனையான சாய்னா நெவால் 21-15, 21-9 என்ற செட்களில் டென்மார்க்கின் சோஃபி தாஹலை வீழ்த்தினார்.

இதனையடுத்து தனது 2-வது சுற்றில் மற்றொரு டென்மார்க் வீராங்கனையான லைன் ஜேர்ஸ்ஃபெல்டட்டை எதிர்கொள்கிறார் சாய்னா.

இதனிடையே, நடப்புச் சாம்பியனான சிந்து முதல் சுற்றில் 21-10, 21-13 என்ற செட்களில் டென்மார்க்கின் நடாலியா ரோடேவை வென்றார்.

சிந்து தனது 2-வது சுற்றில் இந்தியாவின் வைதேகி செளதரி அல்லது பல்கேரியாவின் லின்டா ஸெட்சிரியை எதிர்கொள்வார்.

இதர ஆட்டங்களில் ருத்விகா ஷிவானி, அகர்ஷி காஷ்யப் ஆகியோரும் தங்களது முதல் சுற்றில் வெற்றி கண்டு அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாய் பிரணீத் 21-11, 17-21, 21-17 என்ற செட்களில் இங்கிலாந்தின் ராஜீவ் அவ்செப்பை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

பும்ராவையே ஓரம் கட்டிய 'மிஸ்டரி ஸ்பின்னர்'.. T20 தரவரிசையில் வருண் சக்கரவர்த்தி புதிய சரித்திரம்
ஆஷஸ் 3வது டெஸ்ட்.. சரிந்த விக்கெட்டுகள்! சரித்திரம் படைத்த அலெக்ஸ் கேரி! ஆஸி.யை மீட்ட ஒற்றை நாயகன்!