35 பந்துகளில் அதிவேகமாக சதம் அடித்த ரோகித்...! டி-20 போட்டியில் அசத்தல்...!

First Published Dec 22, 2017, 8:07 PM IST
Highlights
Indian cricketer Rohit Sharma has climbed to 35 in the second T20 cricket match against Sri Lanka.


இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டியில் 35 பந்துகளில் சதமடித்து அதிரடி கிளப்பியுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா.

இலங்கை அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரை விளையாட இந்தியா வந்துள்ளது. 

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்று கணக்கில் தொடரை வென்றது. தற்போது ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் இந்தியா ஒருநாள் தொடரை 2-1 என்று கணக்கில் வென்றது.

கட்டாக்கில் நடந்த முதல் டி-20 போட்டியில் இந்தியா 93 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டி-20 போட்டி தற்போது மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள 'ஹோல்கர்' மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இலங்கை டாஸ் வென்று, பந்து வீச முடிவு செய்தது.

இந்நிலையில், டி-20 கிரிக்கெட் போட்டியில் 35 பந்துகளில் சதமடித்து அதிரடி கிளப்பியுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா. அதில் 8 சிக்சர்களும் 11 பவுண்டரிகளும் அடங்கும். 

click me!