5 வருஷத்துக்கு பிறகு இந்திய அணியை வச்சு சம்பவம் செய்த ஆஸ்திரேலியா!!

By karthikeyan VFirst Published Feb 25, 2019, 12:04 PM IST
Highlights

முதல் டி20 போட்டியில் கடைசி பந்தில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி திரில் வெற்றி பெற்றது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, வெறும் 126 ரன்களை மட்டுமே எடுத்தது. 127 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 5 ரன்களுக்கு உள்ளாக இரண்டு விக்கெட்டுகளை இழந்தபோதிலும் மேக்ஸ்வெல்லும் ஷார்ட்டும் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்து வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். 

அரைசதம் அடித்த மேக்ஸ்வெல் ஆட்டமிழந்ததும், ஷார்ட்டும் ரன் அவுட்டாகி வெளியேற, ஆட்டம் இந்தியாவின் பக்கம் திரும்பியது. அதன்பிறகு மளமளவென விக்கெட்டுகளை சரித்த இந்திய பவுலர்கள், ரன்கள் வழங்காமல் கட்டுக்கோப்பாக வீசினர். கடைசி 2 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட, 19வது ஓவரை வீசிய பும்ரா, அந்த ஓவரில் 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். எனினும் பும்ராவின் அபாரமான உழைப்பை கடைசி ஓவரில் வீணாக்கினார். 

கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், உமேஷ் யாதவ் அந்த ஓவரை வீசினார். முதல் பந்தில் 1 ரன்னும் இரண்டாவது பந்தில் பவுண்டரியும் கொடுக்க, 4 பந்தில் 9 ரன்களை தேவைப்பட்ட நிலையில், மூன்றாவது பந்தில் பவுலருக்கு சற்று பின்னால் மிட் ஆன் திசையில் அடித்துவிட்டு ரிச்சர்ட்ஸனும் கம்மின்ஸும் இரண்டு ரன்கள் ஓடினர். அதன்பிறகு ஐந்தாவது பந்தில் பவுண்டரி மற்றும் கடைசி பந்தில் 2 ரன்கள் என இலக்கை எட்டி திரில் வெற்றி பெற்றது இந்திய அணி. 

கடைசி பந்தில் ஆஸ்திரேலிய அணி திரில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இதுவரை இந்திய அணியை டி20 போட்டியில் நான்கு அணிகள்(ஆஸ்திரேலிய அணியுடன் சேர்த்து) கடைசி பந்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளன. 

2009ம் ஆண்டு நியூசிலாந்து அணி கடைசி பந்தில் இந்திய அணியை வீழ்த்தியது. அதேபோல 2010ம் ஆண்டு இலங்கை அணியும் 2014ம் ஆண்டு இங்கிலாந்து அணியும் இந்திய அணியை கடைசி பந்தில் வீழ்த்தி வெற்றி பெற்றன. 2014க்கு பிறகு 5 ஆண்டுகள் கழித்து ஆஸ்திரேலிய அணி, கடைசி பந்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. 
 

click me!