
இந்திய அணி இந்த ஆண்டும் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளது.
தென்னாப்பிரிக்கா செல்வதற்கு முன், டெஸ்ட் தரவரிசையில் 124 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தில் இருந்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டியில் தோற்று தொடரை இழந்த இந்திய அணி, மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கு பின்னதாக 121 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக 111 புள்ளிகளுடன் இருந்த தென்னாப்பிரிக்கா, இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளில் வென்றதன்மூலம் 4 புள்ளிகள் அதிகம் பெற்று 115 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
இந்தியாவுடனான தொடருக்குப் பிறகு தென்னாப்பிரிக்க அணி, ஆஸ்திரேலியாவுடன் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் வரையிலான காலத்தில் முதலிடத்தில் இருக்கும் அணி, டெஸ்ட் சாம்பியன் ஆகும். அந்த அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தண்டாயுதம் வழங்கப்படும்.
எனவே இந்த ஆண்டும் இந்திய அணிதான் டெஸ்ட் சாம்பியன். மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தண்டாயுதம் மற்றும் ஒரு மில்லியன் டாலர் பரிசுத்தொகையும் இந்திய அணிக்கு வழங்கப்படும்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.