
சர்வதேச குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்கும் வகையில் இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் முழுமையாகத் தகுதிப் பெற்றுள்ளது.
புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்துக்கு (பிஎஃப்ஐ), சர்வதேச குத்துச்சண்டை சங்கமான ஏஐபிஏ முழு உறுப்பினர் அந்தஸ்தை செவ்வாய்க்கிழமை வழங்கியது.
"இந்தியாவுக்கு முழுமையான உறுப்பினர் அந்தஸ்து வழங்குவதென ஏஐபிஏ கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது' என்று இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் தலைவர் அஜய் சிங் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் சர்வதேச குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்கும் வகையில் இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் முழுமையாகத் தகுதிப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.