
மகளிர் கிரிக்கெட்டில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் ஆட்டம் திங்கள்கிழமை நடைபெறுகிறது.
மூன்று ஒருநாள், ஐந்து டி20 ஆட்டங்களைக் கொண்ட கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்வதற்காக இந்திய மகளிர் அணி தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது.
2017 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் வரையில் முன்னேறிய இந்திய அணி, 7 மாத இளைப்பாறலுக்குப் பிறகு தற்போது களம் காண்கிறது.
மிதாலி ராஜ் தலைமையிலான இந்த அணிக்கு, ஹர்மன்பிரீத் கெளர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
விக்கெட் கீப்பர் டானியா பாட்டியா, எக்தா பிஷ்த், ராஜேஷ்வரி கெய்க்வாட், ஜுலன் கோஸ்வாமி, வேதா கிருஷ்ணமூர்த்தி, ஸ்மிருதி மந்தனா, மோனா மேஷ்ராம், சிக்ஷா பாண்டே, பூனம் ராவத், ஜெமிமா ரோட்ரிகஸ், தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், சுஷ்மா வர்மா, பூனம் யாதவ் ஆகியோர் அணியில் உள்ளனர்.
இந்த ஒருநாள் தொடரில் வெற்றி பெறுவதன் மூலமாக, 2021-ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு இரு அணிகளுக்கும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.