கபடி போட்டியில் ஆண்களில் சாய், பெண்களில் ஹரியான அணிகள் கோப்பை கைப்பற்றியது…

Asianet News Tamil  
Published : Apr 18, 2017, 11:29 AM ISTUpdated : Sep 19, 2018, 03:10 AM IST
கபடி போட்டியில் ஆண்களில் சாய், பெண்களில் ஹரியான அணிகள் கோப்பை கைப்பற்றியது…

சுருக்கம்

In the mens championship tilt the Haryana girls teams captured the Cup

தேசிய அளவிலான சப் - ஜூனியர் கபடி போட்டியின் ஆடவர் பிரிவில் இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) அணியும், மகளிர் பிரிவில் ஹரியாணா அணியும் கோப்பையைக் கைப்பற்றின.

தேசிய அளவிலான 28-ஆவது சப் - ஜூனியர் கபடி போட்டி, கோவை, சின்னவேடம்பட்டியில் உள்ள சி.எம்.எஸ். கல்லூரி மற்றும் தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் ஆகியவை சார்பில் கோவையில் கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி தொடங்கின.

இதில், ஆடவர் பிரிவில் 27 அணிகளும், மகளிர் பிரிவில் 27 அணிகளும் கலந்து கொண்டன.

இந்தப் போட்டியின் இறுதி ஆட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இதில், ஆடவர் பிரிவில் 'சாய்' அணியும், உத்திர பிரதேச அணியும் மோதின.

இதில், சாய் அணி 49 - 20 என்ற கணக்கில் உத்தரப் பிரதேச அணியை வீழ்த்தியதன்மூலம் கோப்பையை கைப்பற்றியது.

அதேபோன்று, மகளிர் பிரிவில் ஹரியாணா அணியும், சாய் அணியும் மோதின.

இதில், ஹரியான அனி 21 - 15 என்ற கணக்கில் 'சாய்' அணியை வீழ்த்தியதன்மூலம் கோப்பையைத் தட்டிச் சென்றது.

இந்தப் போட்டியில், தமிழக மகளிர் அணி மூன்றாவது இடத்தைப் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

சிம்பு விக்கெட்டை எடுத்தது நான்தான்! வைரலாகும் முதல்வர் ஸ்டாலின் ஸ்பின் பவுலிங் வீடியோ!
Boxing Day Test: முதல் நாளில் சாய்ந்த 20 விக்கெட்டுகள்! ஆஸி., இங்கிலாந்து பௌலர்கள் வெறித்தனம்