தோல்வியிலிருந்து நான் பலத்துடன் மீண்டு வருவேன் - பி.வி. சிந்து நம்பிக்கை...

Asianet News Tamil  
Published : Mar 19, 2018, 10:49 AM ISTUpdated : Sep 19, 2018, 02:05 AM IST
தோல்வியிலிருந்து நான் பலத்துடன் மீண்டு வருவேன் - பி.வி. சிந்து நம்பிக்கை...

சுருக்கம்

I will recover from defeat - PV sindu belief ...

ஆல் இங்கிலாந்து சாம்பியன் பாட்மிண்டன் போட்டியின் அரையிறுதியில் அதிர்ச்சித் தோல்விக் கண்ட இந்தியாவின் பி.வி.சிந்து, தோல்வியிலிருந்து நான் பலத்துடன் மீண்டு வருவேன் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெறும் ஆல் இங்கிலாந்து சாம்பியன் பாட்மிண்டன்  போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருந்த சிந்து 21-19, 19-21, 18-21 என்ற செட்களில் உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான ஜப்பானின் அகானே யமாகுசியின் அதிர்ச்சித் தோல்விக் கண்டார்.

தோல்விக்குப் பிறகு சிந்து பேசியது: "நான் முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். ஆனால், இன்றைய நாள் என்னுடையதாக இல்லை. 

ஒருவர் வென்றால், மற்றவர் தோற்றே ஆக வேண்டும். இந்த ஆட்டத்தில் அதிக ரேலிக்கள் இருந்தது. யமாகுசி சிறப்பாக ஆடினார். 

மூன்று செட்களில் ஆடுவது அவ்வளவு எளிதானதல்ல. 2,3 புள்ளிகள் கூட பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இறுதியில் ஆட்டம் எவரது கைக்கும் செல்லும். 

இந்தப் போட்டியில் இருந்து நான் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது. வெற்றி, தோல்வியை தவிர்த்து இது நல்லதொரு போட்டியாக இருந்தது. தற்போதைய தோல்வியிலிருந்து நான் பலத்துடன் மீண்டு வருவேன்" என்று அவர் கூறினார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ப்பா.. என்னா அடி.. சர்ஃபராஸ் கானை சிஎஸ்கே பிளேயிங் லெவனில் சேர்க்கணும்.. ஜாம்பவான் சப்போர்ட்!
டி20 உலகக் கோப்பையில் பெரிய அணிகளை பந்தாட ஆப்கானிஸ்தான் ரெடி.. ஸ்டிராங் டீம்.. அட! கேப்டன் இவரா?