
என்னுடைய பிரதான வேலை வெளிநாடுகளில் இந்திய அணி வெற்றி பெற உதவுவதுதான். மக்களின் கருத்துகளை என்னால் ஆராயந்து கொண்டிருக்க முடியாது என்று இந்திய வீரர் முரளி விஜய் தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் வீரரன முரளி விஜய் ஒரு வலது-கை மட்டையாளர். துவக்க ஆட்டக்காரர். இந்திய, தமிழ்நாடு கிரிக்கெட் அணிகளுக்காகவும் விளையாடி வருகிறார்.
33 வயதில் 51 டெஸ்டுகள் விளையாடியுள்ள விஜய், 17 ஒருநாள் ஆட்டங்களில் மட்டுமே இடம்பெற்றுள்ளார்.
இந்த நிலையில் முரளி விஜய் அளித்த பேட்டி ஒன்றில், “நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடத் தொடங்கியபோது என்னை 50 ஓவர் மற்றும் டி20 போட்டிகளுக்கான வீரர் என்று முத்திரை குத்தினார்கள்.
டெஸ்டுகளில் சிறப்பாக விளையாடியபோது நான் டெஸ்ட் வீரர் என்கிறார்கள். இதர வகை கிரிக்கெட்டுகளில் விளையாடமுடியாது என்றார்கள்.
மக்களின் கருத்துகளை என்னால் ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது. என்னுடைய பிரதான வேலை - வெளிநாடுகளில் இந்திய அணி வெற்றி பெற உதவுவதுதான்.
50 ஓவர், டி20 கிரிக்கெட்டுகளில் எனக்கான வாய்ப்புகள் இன்னும் உள்ளன. இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2019 உலகக்கோப்பையில் இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்பதே என் லட்சியம்.
என் முன்னே உள்ள தடைகளைத் தாண்டி மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடவேண்டும்” என்று கூறினார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.