
ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
இந்திய வீராங்கள் சாய்னா நெவால் மற்றும் ஹெச்.எஸ். பிரணய் தங்களது 2-வது சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.
ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் சிந்து, ஜப்பானின் அயா ஒஹோரியை எதிர்கொண்டார்.
இருவருக்கும் இடையே நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் சிந்து 21-14, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
அயா ஒஹோரிக்கு எதிராக சிந்து பதிவு செய்யும் 3-வது வெற்றி இது. சிந்து தனது காலிறுதியில், போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் ஜப்பானின் அகானே யமாகுசியை எதிர்கொள்கிறார்.
உலகின் 10-ஆம் நிலை வீராங்கனையான சாய்னா நெவால், தனது 2-வது சுற்றில் போட்டித் தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருக்கும் சீனாவின் சென் யுஃபெயிடம் 21-18, 19-21, 10-21 என்ற செட் கணக்கில் வீழ்ந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் 10-ஆம் நிலை வீரரும் இந்தியருமான ஹெச்.எஸ்.பிரணாய் தனது 2-வது சுற்றில் ஜப்பானின் கஸுமாஸா ஸகாயிடம் 21-11, 10-21, 15-21 என்ற செட் கணக்கில் தோல்வி கண்டு வெளியேறினார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.