கங்குலிக்கு பெயருடன் வந்த கொலை மிரட்டல்…

Asianet News Tamil  
Published : Jan 10, 2017, 11:43 AM ISTUpdated : Sep 19, 2018, 02:57 AM IST
கங்குலிக்கு பெயருடன் வந்த கொலை மிரட்டல்…

சுருக்கம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு, ஆலம் என்ற பெயரில் கொலை மிரட்டல் வந்துள்ளது.

தற்போது மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருக்கும் கங்குலி, மிட்னாபூரில் நடைபெறும் கல்லூரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியைக் காண சிறப்பு விருந்தினராக கங்குலி அழைக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில், அந்தப் போட்டியைக் காண கங்குலி வந்தால், அவர் கொலை செய்யப்படுவார் என கங்குலியின் தாயார் நிருபாவிற்கு கடந்த 5-ஆம் தேதி கொலை மிரட்டல் கடிதம் அனுப்பபட்டுள்ளது.

ஆலம் என்ற பெயரில் இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இந்த தகவலை தற்போது உறுதிச் செய்துள்ள கங்குலி, இதுதொடர்பாக மிட்னாபூர் மாவட்ட காவலர் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 7-ஆம் தேதி புகார் தெரிவித்தார்.

இதனிடையே, செய்தியாளரிடம் பேசிய கங்குலி, திட்டமிட்டபடி போட்டிகளைக் காண மிட்னாபூர் செல்ல இருப்பதாகக் கூறியுள்ளார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IPL 2026: இ-சிகரெட் முதல் போன் வரை.. வீரர்களுக்கு பிசிசிஐ போட்ட செக்! இனி இதுக்கெல்லாம் தடா!
yuzvendra chahal: விமானத்தில் சாஹல் செய்த விபரீதம்: சிக்கிய வீடியோ... முடிவுக்கு வரும் கிரிக்கெட் வாழ்க்கை?