
பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய் பிரணீத், எச்.எஸ்.பிரணாய், ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.
பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் சாய் பிரணீத் தனது முதல் சுற்றில் தாய்லாந்தின் கோஷித்துடன் மோதினார். இதில், 21-13, 21-23, 21-19 என்ற செட் கணக்கில் கோஷித்தை வீழ்த்தினார் .சாய் பிரணீத்.
அதேபோன்று இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய் மற்றும் தென் கொரியாவின் லீ ஹியூன் மோதினர். இதில், 21-15, 21-17 என்ற நேர் செட்களில் லீ ஹியூனை வீழ்த்தினார் எச்.எஸ்.பிரணாய்.
இந்த வெற்றியின்மூலம் சாய் பிரணீத், எச்.எஸ்.பிரணாய் ஆகிய இருவரும் பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.