2021-ல் முதன்முறையாக ஆடவருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியின்ஷிப் போட்டி இந்தியாவில்…

Asianet News Tamil  
Published : Jul 26, 2017, 09:36 AM ISTUpdated : Sep 19, 2018, 12:56 AM IST
2021-ல் முதன்முறையாக ஆடவருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியின்ஷிப் போட்டி இந்தியாவில்…

சுருக்கம்

For the first time in 2021 the World Boxing Championships for Men in india

இந்தியாவில் முதன்முறையாக ஆடவருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியின்ஷிப் போட்டி வரும் 2021-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ளது.

சர்வதேச குத்துச்சண்டை சங்க (ஏஐபிஏ) தலைவர் சிங் குவோ வு வெளியிட்டுள்ள அறிக்கை:

“'2019-ஆம் ஆண்டுக்கான ஆடவர் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப் போட்டி 2019-ஆம் ஆண்டு ரஷியாவின் சோச்சி நகரில் நடைபெறும். 2021-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஷிப் இந்தியாவின் புது டெல்லியில் நடைபெறும்.

அதேபோல், 2018-ஆம் ஆண்டுக்கான மகளிர் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப் போட்டி இந்தியாவிலும், 2019-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஷிப் போட்டி துருக்கியிலும் நடைபெறும்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆடவர் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப் போட்டி இதுவரை நடத்தப்படவில்லை. எனினும், 2006-ஆம் ஆண்டில் மகளிருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது.

இந்த அறிவிப்பு தொடர்பாக, இந்திய ஆடவர் குத்துச்சண்டை பயிற்சியாளர் சான்டியாகோ நீவா, மகளிர் குத்துச்சண்டை பயிற்சியாளர் குருபாக்ஸ் சிங் சாந்து, விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல், குத்தச்சண்டை வீராங்கனை மேரி கோம், வீரர் அகில் குமார் ஆகியோர் மகிழ்ச்சியும், வாழ்த்துகளும் தெரிவித்துள்ளனர்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ப்பா.. என்னா அடி.. சர்ஃபராஸ் கானை சிஎஸ்கே பிளேயிங் லெவனில் சேர்க்கணும்.. ஜாம்பவான் சப்போர்ட்!
டி20 உலகக் கோப்பையில் பெரிய அணிகளை பந்தாட ஆப்கானிஸ்தான் ரெடி.. ஸ்டிராங் டீம்.. அட! கேப்டன் இவரா?