மாரத்தான் போட்டியில் எத்தியோபியாவைச் சேர்ந்த சாலமன் டெக்சிசா ஆடவர் பிரிவிலும், சகநாட்டவரான அமானே கொபேனா மகளிர் பிரிவிலும் சாம்பியன் ஆகினர்.
மும்பையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஆடவர் பிரிவில் சாலமன் டெக்சிசா பந்தய இலக்கான 42 கிலோ மீட்டரை 2 மணி 9 நிமிடம் 34 நொடிகளில் எட்டி முதலிடம் பிடித்தார்.
சகநாட்டவரான ஷுமெட் அகல்னா 2 மணி 8 நிமிடம் 35 நொடிகளில் வந்து 2-ஆம் இடமும், கென்யாவைச் சேர்ந்த ஜோஷுவா கிப்கோரிர் 2 மணி 10 நிமிடம் 30 நொடிகளில் வந்து 3-ஆம் இடமும் பிடித்தனர்.
அதேபோன்று மகளிர் பிரிவில் அமானே கொபேனா 2 மணி 25 நிமிடம் 49 நொடிகளில் முதல் வீராங்கனையாக வந்தார்.
கென்யாவின் போர்னஸ் கிடுர் 2 மணி 28 நிமிடம் 48 நொடிகளில் வந்து 2-ஆம் இடமும், எத்தியோபியாவின் ஷுமோ ஜினிமோ 2 மணி 29 நிமிடம் 41 நொடிகளில் வந்து 3-ஆம் இடமும் பிடித்தனர்.
இரண்டு பிரிவுகளிலும் வெற்றியாளர்களுக்கு தலா ரூ.26 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.
இந்தப் போட்டியின் ஆடவர் பிரிவில் பங்கேற்ற இந்தியர்களான கோபி தொனகல், நிதேந்திர சிங் ராவ் ஆகியோர் முறையே 11, 12-ஆவது இடங்களைப் பிடித்தனர்.