விக்கெட் கீப்பர் கேப்டனாக இருப்பதால் என்ன நன்மை..? தினேஷ் கார்த்திக் விளக்கம்

 
Published : May 04, 2018, 05:15 PM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
விக்கெட் கீப்பர் கேப்டனாக இருப்பதால் என்ன நன்மை..? தினேஷ் கார்த்திக் விளக்கம்

சுருக்கம்

dinesh karthik spoken about advantages of wicket keeper captains

விக்கெட் கீப்பர், கேப்டனாக செயல்படுவதில் உள்ள சாதகங்கள் குறித்து தினேஷ் கார்த்திக் விளக்கமளித்துள்ளார்.

ஐபிஎல் 11வது சீசனில் கொல்கத்தா அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் செயல்பட்டு வருகிறார். பேட்டிங்கிலும் அதிரடியாக ஆடி அசத்தி வருகிறார். தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி, இதுவரை 9 போட்டிகளில் ஆடி 5 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

பெங்களூரு, சென்னை அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து வெற்றி பெற்றுள்ள கொல்கத்தா அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் உத்வேகத்தில் உள்ளது.

இதற்கிடையே ஸ்போர்ட்ஸ் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த தினேஷ் கார்த்திக்கிடம், ஐபிஎல் போட்டிகளில் விக்கெட் கீப்பர்கள், கேப்டன்களாக சிறப்பாக செயல்பட்டுள்ளனர். தோனி, ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோர் ஐபிஎல்லில் சிறந்த கேப்டன்களாக விளங்கியுள்ளனர். அந்த வகையில், விக்கெட் கீப்பர்கள் கேப்டன்களாக செயல்படுவதில் உள்ள சாதகங்கள் என்ன? என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த தினேஷ் கார்த்திக், விக்கெட் கீப்பராக இருக்கும்போது, ஃபீல்டிங்கை தெளிவாக அமைக்க இயலும். பேட்ஸ்மேன் எப்படி அடிப்பார் என்பதற்கு ஏற்றவாறு ஃபீல்டிங் செட் செய்ய முடியும். முழு மைதானத்தின் மீதும் தெளிவான பார்வை வைக்க இயலும் என்பதால், அது ஃபீல்டிங் அமைப்பதற்கு சாதகமாக அமையும் என பதிலளித்தார்.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

இதுதான் bazball ஆட்டம்..! இங்கிலாந்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா! 3 பேர் அதிரடி அரை சதம்!
வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?