அண்ணா பல்கலைக்கழக மகளிர் கூடைப்பந்துப் போட்டியில் திண்டுக்கல் கல்லூரி சாம்பியன் வென்றது...

 
Published : Dec 19, 2017, 10:15 AM ISTUpdated : Sep 19, 2018, 01:42 AM IST
அண்ணா பல்கலைக்கழக மகளிர் கூடைப்பந்துப் போட்டியில் திண்டுக்கல் கல்லூரி சாம்பியன் வென்றது...

சுருக்கம்

Dindigul college champion wins Anna University Women Basketball Tournament

அண்ணா பல்கலைக்கழக அளவிலான மகளிருக்கான கூடைப்பந்துப் போட்டியில் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி அணி பட்டம் வென்றது.

அண்ணா பல்கலைக்கழக அளவிலான மகளிருக்கான கூடைப்பந்துப் போட்டி கோயம்புத்தூர், குனியமுத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் நடைப்பெற்றது.

இதில், சென்னை செயின்ட் ஜோசப், சத்தியபாமா, ஜேப்பியார், சிவகாசி மெப்கோ, ஈரோடு பில்டர்ஸ், நாமக்கல் பாவை, கோவை சி.ஐ.டி., இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட 12 கல்லூரி அணிகள் கலந்து கொண்டன.

இந்தப் போட்டியின் இறுதி ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சென்னை செயின்ட் ஜோசப், திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. கல்லூரி அணிகள் மோதின.

இதில் 67-53 என்ற புள்ளிகள் கணக்கில் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. கல்லூரி அணி வெற்றி பெற்றது.

மூன்றாவது இடத்தை ஜேப்பியார் கல்லூரியும், 4-வது இடத்தை நாமக்கல் பாவை பொறியியல் கல்லூரி அணியும் பிடித்தன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு கல்லூரி முதல்வர் ஜே.ஜேனட் பரிசுக் கோப்பை, சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.

இந்த விழாவில் விளையாட்டுத் துறை இயக்குநர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

முதல் T20: ஜெமிமா ருத்ரதாண்டவம்.. கைகொடுத்த ஸ்மிருதி மந்தனா.. இலங்கையை பந்தாடிய இந்தியா!
U19 ஆசிய கோப்பையை தட்டித் தூக்கியது பாகிஸ்தான்! 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!