
மாநில அளவிலான சிறுமியர்களுக்கான கபடிப் போட்டியில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி தருமபுரி அணி வாகைச் சூடி அசத்தியது.
29-ஆவது மாநில அளவிலான சிறுமியர்களுக்கான கபடி சாம்பியன்ஷிப் போட்டி திருவண்ணாமலையில் நடைபெற்றது. இதனை தமிழ்நாடு அமெச்சூர் கபடிக் கழகமும், திருவண்ணாமலை மாவட்ட கபடிக் கழகமும் இணைந்து நடத்தின.
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டரங்கில் நடைப்பெற்ற இந்தப் போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து 26 அணிகள் கலந்து கொண்டன.
நேற்று நடைபெற்ற இதன் இறுதி ஆட்டத்தில் தருமபுரி, திண்டுக்கல் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்த் ஆட்டத்தில் தருமபுரி அணி 36-26 என்ற புள்ளிகள் கணக்கில் திண்டுக்கல் அணியை தோற்கடித்து வாகைச் சூடின.
வெற்றிப் பெற்ற அணிகளுக்குப் பரிசு வழங்கும் விழா நேற்று மாலை நடைபெற்றது.
இந்த விழாவிற்கு தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடிக் கழக நிர்வாகி எம்.ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.