இன்று தொடங்குகிறது டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன்; சிந்து, சாய்னா, ஸ்ரீகாந்த் பங்கேற்பு….

First Published Oct 17, 2017, 9:42 AM IST
Highlights
denmark open super series starts today


இன்று தொடங்கும் டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சார்பில் பி.வி.சிந்து, சாய்னா, ஸ்ரீகாந்த் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

டென்மார்க்கின் ஓடென்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி இன்று தொடங்குகிறது.

போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் சிந்து ஜப்பான் ஓபனில் ஆரம்பத்திலேயே வெளியேறினார். இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறார். அவர் தனது முதல் சுற்றில் உலகின் 10-ஆம் நிலை வீராங்கனையான சீனாவின் சென் யூஃபெய்யை சந்திக்கிறார். 

மற்றொரு இந்திய வீராங்கனையான போட்டித் தரவரிசையில் 12-ஆவது இடத்தில் இருக்கும் சாய்னா நெவால் 16 மாதங்களுக்குப் பிறகு சூப்பர் சீரிஸ் போட்டியில் வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறார்.,

இவர் தனது முதல் சுற்றில் போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் கரோலினா மரினை சந்திக்கிறார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவைப் பொறுத்தவரையில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. தொடர்ச்சியாக மூன்று சூப்பர் சீரிஸ் இறுதிச் சுற்றுகளில் விளையாடி, அதில் இரு பட்டங்களை வென்ற நிலையில், இப்போது ஜப்பான் ஓபனில் களமிறங்குகிறார் ஸ்ரீகாந்த். 

இவர் தனது முதல் சுற்றில் சகநாட்டவரான சமீர் வர்மாவை சந்திக்கிறார் ஸ்ரீகாந்த்.

tags
click me!