கோல் மழையைப் பொழிந்து வெற்றிக் கண்டது டெல்லி…

First Published Nov 28, 2016, 12:10 PM IST
Highlights


புதுடெல்லி,

3–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் டெல்லியில் நேற்று இரவு நடந்த 50–வது லீக்கில் டெல்லி டைனமோசும், எப்.சி. கோவாவும் மோதின. இதில் கோலை மழையாய் பொழிந்து 5-1 என்ற கணக்கில் டெல்லி வென்றது.

31–வது நிமிடத்தில் கோவா வீரர் புல்கன்கோ கார்டோஜோ கோல் அடித்தார். அதன் பிறகு டெல்லி வீரர்களின் அதிரடி தாக்குதலில் கோவா அணியினர் மிரண்டு போனார்கள். பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது (62 சதவீதம்), கடத்துவது, துல்லியமாக சக வீரர் வசம் தட்டிவிடுவது என்று எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்திய டெல்லி அணி கோல் மழை பொழிந்தது.

மார்செலோ பெரீரா ஹாட்ரிக் (38, 48, 56–வது நிமிடம்) கோலும், ரிச்சர்ட் காட்ஸி (51, 57–வது நிமிடம்) 2 கோலும் அடித்து உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர்.

முடிவில் டெல்லி அணி 5–1 என்ற கோல் கணக்கில் கோவாவை பந்தாடியது. இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடி 20 புள்ளிகளுடன் 2–வது இடத்துக்கு முன்னேறி இருக்கும் டெல்லி அணி அரைஇறுதியை ஏறக்குறைய உறுதி செய்து விட்டது.

அதே சமயம் 8–வது தோல்வியை சந்தித்த கோவா போட்டியை விட்டு வெளியேறியது. போட்டியில் இன்று ஓய்வு நாளாகும்.

tags
click me!